Ad Widget

வளிமண்டல தளம்பல் காரணமாக இன்று முதல் மழை அதிகரிக்கும்!!

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் காணப்படும் தளம்பல் நிலை அதிகரித்து வருவதால், இன்று (27) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழை நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மி.மீ. அளவான் பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை எதிர்பாரக்கப்படுகின்றது.

Related Posts