வடக்கு முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய காணாமல்போனோரின் உறவுகள்!

கிளிநொச்சியில் 28 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை நேற்று காலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முதலமைச்சரின் காலில் விழுந்து தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கதறி அழுதுள்ளனர். அத்துடன் தமது உறவுகளின் விடுதலைக்கு முதலமைச்சர் முயற்சி எடுக்கவேண்டுமெனவும், தங்களுக்காக குரல்கொடுக்கவேண்டுமெனவும் அவரின் காலில் விழுந்து கும்பிட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர் தங்களின் போராட்டம் நியாயமானது எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில் நான் பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன் எனவும் விரைவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணைக்குழு அறிக்கையையும் வெளிப்படுத்துமாறும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

Related Posts