ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதை ஒழிப்பு மாதத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நேற்று (20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வினை மாவட்ட செயலகத்தில் வைத்து மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன் ஆரம்பித்து வைத்தார்.
புகையிலை மது மற்றும் ஏனைய போதைப் பொருள் பாவனைகளினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக்கூறும் விதமாக இடம்பெற்ற இந்த விழிப்புணர்வுப் போரணி யாழ் பஸ் நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.