முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைள் இன்று ஆரம்பம்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளிலும் 2025 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (21) ஆரம்பமாகியுள்ளன.

கல்வி அமைச்சின் தகவலின்படி, 2025 ஆம் கல்வியாண்டின் முதலாம் தவணையானது எதிர்வரும் மே 09 ஆம் திகதியுடன் நிறைவு பெறும்.

அதையடுத்து, 2025 ஆம் கல்வியாண்டின் இரண்டாம் தவணையின் முதல் கட்டம் மே 14 திங்கள் முதல் ஆகஸ்ட் 07 ஆம் திகதி வரை இடம்பெறும்.

அதன் பின்னர், மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 08 முதல் ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை நடைபெறும்.

மேலும், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related Posts