Ad Widget

பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினருக்கு அழைப்பு!!

நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்கள் அனைவரையும் அழைப்பதற்கான உத்தரவு அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் முதன்முறையாக முப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts