Ad Widget

நெல்லியடயில் புடவைக்கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு!

நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது, மர்ம நபர்கள் சிலரால் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே , புடவைக்கடைக்கு பின் புறமாக வந்து பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரினால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts