கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக நாளைய தினம் காலை 10 மணிக்கு பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோரியும், பறிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் சமவுரிமை மக்கள் இயக்கத்தால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
யாழ்.ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சமவுரிமை மக்கள் இயக்கத்தினர் இதனை குறிப்பிட்டுள்ளனர். .
இதேவேளை, எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இதே விடயங்களை வலியுறுத்தி கொழும்பில் சத்தியாகிரக போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில் 17ஆம் திகதி சமவுரிமை மக்கள் இயக்கத்தினரும், 18ஆம் திகதி ஊடகவியலாளர்களும், 19ஆம் திகதி கலைஞர்களும், 20ஆம் திகதி தொழிற்சங்கங்களும், 21ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்களும், 22ஆம் திகதி மத குருமார்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி அனைவரும் இணைந்து இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தவுள்ளதாக சமவுரிமை இயக்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.