இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை இலவசமாக பத்து கற்கைநெறிகளை யாழ்.மாவட்டத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆரம்பிக்கவுள்ளது.
இந்தக் கற்கைநெறிகள் ஜனவரி ஆரம்பமாகவுள்ளது.
- கட்டட நிர்மாண தொழில்நுட்ப உதவியாளர்
- வீட்டு மின்னிணைப்பாளர்
- காய்ச்சி இணைப்பாளர் (வெல்டிங்)
- மரவேலை தொழில்நுட்பவியலாளர்(தளபாடம்)
- நீர்குழாய் பொருத்துநர்
- வெளியிணைப்பு இயந்திரம் திருத்துநர்,
- அலுமினியம் பொருத்துநர்
- வீட்டு மின்சார உபகரண திருத்துநர்
- மின்மோட்டார் கம்பி மீள் முறுக்குநர்(றிவைண்டிங்)
- விவசாய உபகரண திருத்துநர்
ஆகிய கற்கைநெறிகளும் தேசிய தொழில் தகைமை சான்றிதழுக்கான பயிற்சிகளாகும்.
இந்தக் கற்கைநெறிகளை கற்க விரும்புவர்கள் தங்கள் பதிவுகளை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் உள்ள அலுவலகத்தில் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.