Ad Widget

தெரு நாய்கள் கடிக்கும் போது அவதானமாக இருக்க வேண்டும்!!

விசர் நாய் கடி தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விலங்குகளின் விசர் ஏற்படுவது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை. விசர் நாய் கடிக்கும் போது கட்டாயமாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும்.

விசக் கடிக்கு தீண்டப்படும் போது 5 நிமிடங்கள் நீரினால் கழுவ வேண்டும். சவர்க்காரம் இட்டும் கழுவலாம் பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

வைத்தியர்களிடம் நாய் அல்லது பூனை தொடர்பாக முழுவிபரத்தை தெரிவிக்க வேண்டும்.

தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாய்கள் கடிக்கும் போது அதில் கிருமிகள் இருக்காது ஆனால் தெரு நாய்கள் கடிக்கும் போது கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Posts