துர்க்கை அம்மனுக்கு கஞ்சா ரொட்டி பூஜை

துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் தாம் சில நேர்த்திக் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைப்பதாகவும் நபரொருவர், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று தெரிவித்தார்.

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வைத்து 275கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த முப்பது வயதான சந்தேகநபர், கிளிநொச்சிப் பொலிஸாரால் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

அவரை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் ஆஜர் செய்தபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், நீதவான், சந்தேகநபரிடம் கேள்வியெழுப்பியபோது, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றுக்கு முன்னால் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் சில பிதிர்க் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts