அண்மையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என, மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பேரவை என்ற சொல்லை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்துடன் தொடர்புபடுத்தி பொது மக்கள் நோக்குகின்ற நிலை காணப்படுகின்றது. இது தொடர்பாக பலர் என்னுடன் நேரிலும் தொலைபேசி மூலமும் கேட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சபை மக்களின் தேவைகளை நிறைவு செய்வதிலும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஜனாதிபதி வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்களின் முகாம்களை நேரில் பார்வையிட்டு குறித்த மக்களின் பிரச்சினைகளை, உண்மை நிலையை கண்டறிந்து ஆறுதல் கூறியிருப்பது அண்மைக்கால அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள கருத்து நிலை மாற்றத்தை வெளிக்காட்டுகின்றது.
இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலை அவரின் உள்ளத்தைத் தொட்டிருக்கும். ஜனாதிபதி குறிப்பிட்ட பிரகாரம் நடவடிக்கைகளை முன்னெடுப்பாரென நம்புகின்றோம் என்றார்.