தனியார் வைத்தியசாலைகளின் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் தடுப்பூசி

தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரம் முதல் முன்னெடுக்கபப்படவுள்ளது.

அதன்படி, இந்த திட்டம் எதிர்வரும் புதன்கிழமை முதல் முன்னெடுக்கப்படும் என விஷேட வைத்தியர் அமல் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார்.

பிரதான வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண தனியார் வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்களுக்கு அருகில் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் இலவசமாக இந்த தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts