வாள்வெட்டு சம்பவம் ஒன்று நேற்று இரவு சுண்ணாகத்தின் மத்தியில் இடம்பெற்றுள்ளதாக சுண்ணாகம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத குழுக்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரும் 21 வயது மதிக்கத்தக்க இருவரும் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.