Ad Widget

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 தமிழக மீனவர்கள் கைது!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இன்று காலை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது குறித்த மீனவர்களிடம் இருந்து 4 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், தனுஸ்கோடி மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts