கிளிநொச்சியில் விபத்து இரு இளைஞர்கள் அவசர சிகிச்சை பிரிவில்

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ஒரு இளைஞனின் கால் முறிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

டிப்போ சந்தியில் இருந்து கனகபுரம் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் அம்பாள் குள வீதியில் இருந்து கனகபுரம் பிரதான பாதையூடாக டிப்போ சந்திப் பக்கமாக திரும்பிய வேன் வாகனத்தின் பின்பகுதியில் மோதியதன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

அத்துடன் மோட்டர் சைக்கிளில் வந்தவர்களின் அதிக வேகமே இந்த விபத்துக்குக் காரணம் என்பது விபத்து நடந்த இடத்திற்கு முன்னால் உள்ள உணவகத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts