காரைநகரிலிருந்து யாழ்ப்பாண நகரம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து கடலுக்குள் பாய்ந்ததில் நடத்துநர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காரைநகர்-யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.