Ad Widget

கடைக்கும் அங்கு இருந்தவர்கள் மீதும் தீ வைக்க முயன்ற கும்பல்!! பொலிஸாரை கண்டதும் தப்பி ஓட்டம்!!

நெல்லியடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் கடைக்கு தீ வைக்க முயன்றபோது பொலிஸார் அங்கு வந்ததால் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. வாளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடையில் இருந்தவர்கள் மீதும், பொருட்கள் மீதும் பெற்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளனர்.

இதன்போது பொலிஸார் அங்கு வந்த நிலையில் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

Related Posts