எரிபொருள் சம்பந்தமாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விலைப் பொறிமுறையை எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் அமைச்சரவையில் முன்வைக்க இருப்பதாக பெட்ரோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவிக்கின்றார்.
புதிய விலைப் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் உள்நாட்டில் நிலையான விலையொன்றை பேணுவதற்கு முடிவதாக அமைச்சர் கூறினார்.
இமதுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
புதிய விலைப் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.