ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ரவீந்திரன் தருசன் என்ற இளைஞனே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞரின் முகநூலில் ஆவா குழுவினைச் சேர்ந்த நபர்களுடன் குழுவாக எடுக்கப்பட்ட புகைப்படம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அந்த புகைப்படத்தினை ஆதாரமாக வைத்தே இளைஞனை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாண பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்ப்பாண பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.