Ad Widget

அடுத்த 24 மணி நேரத்திற்கு வௌியான எச்சரிக்கை!!

அடுத்த 24 மணி நேரத்திற்கு வௌியான எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (14) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வடக்கு அட்சரேகை மற்றும் கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளில் 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதுடன் மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும். மேற்குறிப்பிட்ட வரைபடத்தில் “எச்சரிக்கை” பிரிவின் கீழ் குறிக்கப்பட்டுள்ள கடல் பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் பயணம் செய்ய வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகள் குறித்து மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Related Posts