ஜனாதிபதி சாரணர் விருதிற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வு முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
2013ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி சாரணிய விருதிற்கு வடமாகாணத்திலுள்ள மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வு நேற்று செவ்வாய்கிழமை யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இந்நேர்முகத் தேர்வு சாரணிய அபிவிருத்தி உதவி பிரதம ஆணையாளர் எஸ்.ஏ.அமரசிங்க, தேசிய நிகழ்ச்சி ஆணையாளர் சரத்கொட கந்தராச்சி, அலுவலக ஆணையாளர் காமிணி கருணாரத்ன, அலுவலக ஆணையாளர்களான ரூவான் ஆரியரத்தின, எஸ்.சவுந்தரராஜன் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன.
மேற்படி நேர்முகத் தேர்வுக்கு யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 22 சாரணிய மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
கடந்த வருடங்களில் ஜனாதிபதி சாரணிய விருதிற்கான சாரணிய மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு கொழும்பிலுள்ள சாரணியத் தலைமையகத்தில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.