யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இன்று புதன்கிழமை காலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை நோக்கி பேரணியாக செல்கின்றனர்.
மாலபேயிலுள்ள தனியார் மருத்துவ கல்லாரியை மூடுமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ”அரசியலில் கல்வி வேண்டும், கல்வியிலேயே அரசியல் வேண்டாம், அரச மருத்துவர்கள் நடு வீதியில்லா உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை ஏந்திய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.