யாழ். நகரப் பகுதியிலுள்ள கழிவு நீர் வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது.
தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலுக்குள் இருந்தே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் 40 வயது மதிக்கத்தக்க ஆணினுடையது என தெரிவிக்கப்பட்ட போதிலும் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்நபர் மது போதையில் தவறி வாய்க்காலுக்குள் விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ் .போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.