தனியார்துறை ஊழியர்களுக்கு, சம்பள உயர்வைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவரவுள்ளதாக தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, நேற்று வியாழக்கிழமை(10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு- செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இதற்கான சட்டமூலம், ஏற்கெனவே வரையப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
தனியார்துறை ஊழியருக்கான சம்பளத்தை 2,500 ரூபாயினால் உயர்த்துமாறு அரசாங்கம் கேட்டதற்கு, 50 நிறுவனங்கள் மட்டும் இணங்கின.
இதனுள் சில அரை- அரசாங்க நிறுவனங்களும், தொழிற்சாலைகளையுடைய மிகச் சொற்பமான நிறுவனங்களும் அடங்குகின்றன.
தனியார்துறை ஊழியருக்கான குறைந்தபட்ச சம்பளத்தை 10,000 ரூபாயாக்கும் சட்டம், விரைவில் கொண்டுவரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.