எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
எதிர்க்கட்சி அலுவலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், புதிய அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது, இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.