காதல் தோல்வியால் மனமுடைந்த கடற்படை சிப்பாய் ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பசற பகுதியைச் சேர்ந்த எஸ்.பி ஏ ல்கமல் ஜெயதிலக (வயது 21) என்ற கடற்படை சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
குறித்த கடற்படை சிப்பாய் அல்லைப்பிட்டி கஞ்சதேவ கடற்படை முகாமில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது தனது ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தற்கொலை தொடர்பான விசாரணையினை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.