உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தோரின் 42ஆவது நினைவுதினத்தையொட்டி யாழ். முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள நினைவாலயத்தில் இன்று(10) நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நினைவு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தனார். தொடர்ந்து வட மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், ஏ.பரஞ்சோதி ஆகியோர் மலர்மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.