வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளதுடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க உண்ணாவிரத போராட்டத்தில் சற்று முன்னர் இணைந்துகொண்டுள்ளார்.
இந்த உண்ணாவிரத போராட்டம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது.