தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பாதுகாப்பு வழங்கக்கோரி வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு நான் பதில் கூற முடியாது’ என்று யாழ். உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எ.நிஹால் பெரேரா இன்று தெரிவித்தார்.
யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.