யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னயில் நோயாளர்களுடன் தொடர்புடைய எவரும் நவீன அலை­பே­சி­கள் பயன்­ப­டுத்த தடை!

கொழும்பு அர­சின் 2006ஆம் ஆண்டு சுற்­ற­றிக்­கைக்கு அமை­யவே, நோயா­ளர் பகு­தி­யில் கமரா வச­தி­யு­டைய நவீன அலை­பே­சி­கள் பயன்­ப­டுத்த முடி­யாது என்­ப­தனை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றோம் என்று யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னைப் பணிப்­பா­ளர் த.சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­தார்.

அங்கு பணி­யாற்­றும் மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள் மற்­றும் ஊழி­யர்­கள் கட­மை­நே­ரத்­தில் நவீ­ன­வகை அலை­பே­சி­ க­ளைப் பயன்­ப­டுத்­தத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பில், நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கேட்­ட­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

“மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­றும் பணிப்­பா­ள­ரான நான் உட்­பட சகலரும் நோயா­ளர்­க­ளின் தேவை­யைப் பூர்த்தி செய்­யவே நிய­மிக்­கப்­பட்­டுள்­ளோம். நோயா­ளர் விடு­தி­க­ளில் நான் உட்­பட எவ­ருமே நவீ­ன­வகை அலை­பே­சி­க­ளைப் பயன்­ப­டுத்த முடி­யாது. சுற்­ற­றிக்­கைப்­ப­டியே அது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. நாங்­கள் மட்­டு­மன்றி நோயா­ளர்­க­ளு­டன் தொடர்­பு­டைய எவ­ருமே பயன்­ப­டுத்த முடி­யாது என்­று­தான் கூறி­யுள்­ளோம். இதில் எந்­த­வித பாகு­பா­டும் கிடை­யாது” – – என்­றார்.

Related Posts