முல்லைத்தீவு கடலில் உயிரிழந்த மற்றைய மாணவனின் சடலமும் கண்டெடுப்பு!

முல்லைத்தீவு கடலில் உயிரிழந்த மற்றுமொரு மாணவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரைப் பிரதேசத்தில் நீராடியபோது காணாமல்போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தினமான நேற்று (புதன்கிழமை) நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடலில் குளித்துக்கொண்டிருந்த சமயம் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையிலேயே ஒரு மாணவரின் சடலம் நேற்றயதினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மற்றைய மாணவனின் சடலம் இன்றைய தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Related Posts