இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய 49 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.

நேற்றயதினம் அதிகாலை நெடுந்தீவு, காரைநகர் மற்றும் காங்கேசன்துறை ஆகிய கடற்பகுதிகளில் வைத்தே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் சமிந்த வலாகுளுக்கே தெரிவித்தார்.

குறித்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 12 றோலர் வகையினைச் சேர்ந்த இயந்திரப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த மீனவர்கள் மற்றும் இயந்திரப்படகுகள் மீன்பிடித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts