கிளிநொச்சியில் தம்பதி மீது கத்திக் குத்து: கணவன் பலி, மனைவி படுகாயம்

கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது, ஐந்து பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (16) மதியம் ஒரு மணியளவில் கனகபுரம் பழைய சந்தைக்கருக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும், உதயநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு பலியானதுடன், அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாம் வாடகைக்கு நடத்திய வியாபார நிலையத்திற்கு வழங்கிய முற்பணத்தை மீளப்பெற்றுகொள்வதற்காக கணவன், மனைவி மற்றும் அவர்களது ஆறு வயது மகள் ஆகியோர் கடை உரிமையாளரிடம் சென்றுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தினை அடுத்து கடை உரிமையாளரினால் கணவன், மனைவி ஆகிய இருவரும் கத்தியினால் குத்தப்பட்டுள்ளனர் என, பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

குத்தியவர் எனும் சந்தேகத்தில் கடை உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts