இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளதுடன் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கை நெடுந்தீவு கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.