தற்போதுள்ள அரசாங்கத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாகவே உள்ளோம். நாங்கள் அரசாங்கத்தின் அங்கம் இல்லையென வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நேற்று வியாழக்கிழமைவடமாகாண சபையில் நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா அடிக்கடி, உங்கள் அரசாங்கம் என்ற வார்த்தையை எங்களை நோக்கிப் பயன்படுத்துகின்றார். நாங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்து எதிர்க்கட்சியாகவே நாடாளுமன்றத்தில் இருக்கின்றோம். தவிர அரசாங்கத்தின் அங்கமாக இல்லை என்றார்.