இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்திய முனையத்தை திறந்து வைத்தார்.
யாழ். மாநகர ஆணையாளரர் பொ.வாகீசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்கார, யாழ். இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இரு நாள் பயணமாக வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்த இந்திய உயர்ஸ்தானிகர் சின்ஹா இந்திய உதவித்திட்டத்தில் அமைக்கப்பட்ட சில திட்டங்களை கையளித்து இன்றைய தினம் கொழும்பு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.