வல்வெட்டித்துறை, துரையன் செம்பாட்டுப் பகுதியினைச் சேர்ந்த பெண் ஒருவர் சனிக்கிழமை(17) முதல் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவரது கணவரால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(18) வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஜிதரன் கிருஷ்ணமாலினி(28) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு காணாமற் போயுள்ளார்.
வியாபார நிலையம் ஒன்றில் பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையென அவரது கணவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.