பூநகரிக் கோட்டத்தைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள், வட மாகாண ஆளுநர் சந்திரசிறிக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை ஏற்று விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆசிரிய இடமாற்றத்தின் போது இடமாற்றத் தகுதியிருந்தும் இடமாற்றம் வழங்கப்படவில்லை என்பதைக் கண்டித்தும் தேசிய இடமாற்றக் கொள்ளைக்கு புறம்பாக மாகாணத்தில் இடமாற்றக் கொள்ளை தயாரித்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இம்மனு கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை நேற்று விசாரித்து பிரதம நீதியரசர் சிராணி திலகவர்த்தன தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் மனுவினை விசாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
தொடர்படைய செய்தி