Ad Widget

வன்னிமாவட்டத்தில் தேர்தல்வாக்களிப்பை ஒத்திவைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வன்னிமாவட்டத்திற்கான தேர்தல்வாக்களிப்பை ஒத்திவைக்குமாறு கோரி மனுவொன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக தேசிய கூட்டணி என்ற கட்சி தனது சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுநிராகரிக்கப்பட்டதால் இந்த மனுவைதாக்கல் செய்துள்ளது.

கட்சியை சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசா என்பவரும் வேறு இருவரும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.தங்கள் மனு நிராகரிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவித்துள்ள அவர்கள் தாங்கள் அவசியமான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts