Ad Widget

கீரிமலையிலிருந்து கொழும்பிற்கு மீண்டும் பேருந்து சேவை!

பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் குறித்த பேருந்து சேவைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆண்டுவரை இடம்பெற்ற சேவை பேருந்து இன்மை, மற்றும் சாரதிகள் இன்மை போன்ற காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 7:15 மணிக்கு கீரிமலையிலிருந்து புறப்பட்டு காங்கேசன்துறை, தொண்டமனாறு, வல்வெட்டித்துறை ஊடாக பருத்தித்துறையை வந்தடைந்து பருத்தித்துறையிலிருந்து மந்திகை மாலிசந்தி நெல்லியடி துன்னாலை ஊடாக வவுனியா அனுராதபுரம் புத்தளம் சிலாபம் வழியாக கொழும்பை சென்றடையவுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பருத்தித்துறையிலிருந்து அம்பன் மருதங்கேணி ஊடாக கொழும்புக்கான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எனினும், சாரதி மற்றும் பேருந்துகள் பற்றாக்குறை காரணமாக தற்போது அச்சேவைகளைத் தொடர முடியாதுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமைத்துவம் மேலும் தொிவித்துள்ளது.

Related Posts