Ad Widget

நெல்லியடியில் பொலிஸ் அதிகாரியால் அச்சுறுத்தப்பட்ட நபர் மீது கத்திக்குத்து!!

பொலிஸ் பொறுப்பதிகாரியின் அச்சுறுத்தலுக்குள்ளானவர் சில மணி நேரங்களில் கத்திக் குத்துக்கு இலக்கான சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் மந்திகை ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் என்பவரே காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வீட்டு உரிமை தொடர்பாக இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக பொலிஸாரிடம் ஒரு தரப்பால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், மற்றொரு தரப்பை நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி அச்சுறுத்தியதுடன், அவரது வீட்டு உடைமைகளை தூக்கி எறிந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரின் அச்சுறுத்தல் தொடர்பாக பாதிக்கப்பட்ட காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது இனந்தெரியாத நபர்களால் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார்.

காயமடைந்தவர் நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக காயமடைந்தவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts