Ad Widget

அரச சேவைகள் ஸ்தம்பிதமடையும் அபாயம்!

அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று மற்றும் நாளை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி தபால், நில அளவையாளர், கிராம சேவை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரச ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக தபால் ஊழியர்களும் நேற்று மாலை 4 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவை சங்கம் தெரிவித்திருந்தது.

அத்துடன், ஆசிரியர்களின் அதிபர் சங்கங்கள் இன்று பணிக்கு சமூகமளித்துள்ள போதிலும், நாளை சுகயீன விடுமுறையை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்

இதேவேளை, சுகாதார சேவை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் தாதியர் சங்கம் தெரிவித்துள்ளன.

மேலும் சுகாதார பணிகள் தடையின்றி இன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts