இராணுவத்தில் கடமையாற்றும் தமிழ் பெண்மணிக்கு இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவினால் பயனாளரிடம் கையளிக்கப்பட்டது.

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பலாலி தெற்கு வசாவிளான் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட குறித்த வீடே நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஏழு வருடங்களாக இராணுவத்தில் கடமையாற்றும் தமிழ் பெண்மணி ஒருவருக்கே குறித்த வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் பெண்மணி கடந்த ஏழு வருடங்களாக யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ஊடகப் பிரிவில் கடமையாற்றி வருகின்றார்.

எனினும் அவருக்கு நிரந்தர வீடு இல்லாததன் காரணமாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி எடுத்த முயற்சியின் பயனாக குறித்த பெண்மணிக்கு ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.

குறித்த வீடு கையளிக்கப்பட்ட பின்னர் மரக்கன்று ஒன்றும் இராணுவ தளபதியினால் நாட்டிவைக்கப்பட்டதோடு வீட்டு உரிமையாளருக்கு நினைவுப் பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.

Related Posts